search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராஜபாளையத்தில் கார் மரத்தில் மோதியது - 5 வியாபாரிகள் படுகாயம்
    X

    ராஜபாளையத்தில் கார் மரத்தில் மோதியது - 5 வியாபாரிகள் படுகாயம்

    ராஜபாளையத்தில் கார் மரத்தில் மோதியதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். #accidentcase

    ராஜபாளையம்:

    நெல்லை மாவட்டம், பாபநாசத்தில் வியாபாரிகள் சங்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 30-க் கும் மேற்பட்டோர் சென்றனர்.

    மாநாடு முடிந்த பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வெல்லம் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் தனசேகர் என்பவரின் காரில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், முருகன், திருப்பதி ராஜா மற்றும் ஜெயராஜ் ஆகியோர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். காரை தனசேகர் ஓட்டினார்.

    ராஜபாளையம் அரசு மருத்துவமனை எதிரே கார் வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர மரத்தில் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    இதில் கார்த்திகேயன் படுகாயங்களுடன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்ற 4 பேரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீசார் வழக்குப்பதி செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×