search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைகோ நடவடிக்கையால் அசாம் போலீஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி
    X

    வைகோ நடவடிக்கையால் அசாம் போலீஸ் அதிகாரிக்கு மீண்டும் பணி

    அசாம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி பணிநீக்கம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ராஜமார்த்தாண்டன் மீண்டும் பணியில் சேர ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நடவடிக்கை எடுத்தார்.
    சென்னை:

    அசாம் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த ராஜமார்த்தாண்டன் பொய் குற்றச்சாட்டின் பேரில் அம்மாநில காவல்துறை உயர் அதிகாரியால் பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அவர் அசாம் மாநில முதல்-மந்திரியை தொடர்புக்கொண்டு ராஜமார்த்தாண்டத்தை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுத்தார்.

    இந்தநிலையில் ராஜமார்த்தாண்டத்தின் உறவினர்கள், நண்பர்களும் வைகோவை கலிங்கப்பட்டியில் உள்ள அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். அப்போது அசாம் பாரம்பரிய கலாசாரத்தை பிரதிபலிக்கின்ற வகையில் நினைவுப்பரிசு வழங்கி நன்றியை தெரிவித்துக்கொண்டனர். இதுதொடர்பாக வைகோ நிருபர்களிடம் கூறும்போது, உலகத்தில் எந்த தமிழனுக்கும் துன்பம் நேர்ந்தாலும் தன்னால் இயன்ற அளவுக்கு உதவி செய்வேன்’ என்று கூறினார்.

    மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×