search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை அரசு மருத்துவமனையில் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்
    X

    சென்னை அரசு மருத்துவமனையில் தா.பாண்டியனை சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்

    மூச்சுத்திணறலுக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இ.கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியனை மு.க. ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார்.#DPandianHospitalised #MKStalin #MKStalinmeetsDPandian
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான இவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. 

    இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்நிலையில், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள தா.பாண்டியனை பார்த்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார். 

    ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் பொன்முடி, சென்னை (கிழக்கு) மாவட்ட தி.மு.க. செயலாளர் சேகர் பாபு உள்ளிட்டோர் வந்திருந்தனர். #DPandianHospitalised #MKStalin #MKStalinmeetsDPandian 
    Next Story
    ×