search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் ஏற்றி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்
    X

    மணல் ஏற்றி வந்த 2 டிராக்டர்கள் பறிமுதல்

    காரையூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 2 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    காரையூர்:

    காரையூர் அருகே உள்ள கீழத்தானியம் ஆற்றுப்பகுதியில் அனுதியின்றி மணல் அள்ளப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொன்னமராவதி தாசில்தார் பாலகிருஷ்ணன், காரையூர் வருவாய் ஆய்வாளர் சாதிக் பாட்சா மற்றும் அதிகாரிகள் கீழத்தானியம் ஆற்றுப்பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    அப்போது சூரப்பட்டியில் அந்த வழியாக வந்த 2 டிராக்டர்களை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 
    Next Story
    ×