search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவர்கள் மரியாதை
    X

    அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவர்கள் மரியாதை

    முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். #AbdulKalam
    மானாமதுரை:

    மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளியில் மேலாளர் சுஜய் தலைமையில் அப்துல்கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பள்ளியில் வைக்கப்பட்டிருந்த அப்துல்கலாம் உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்துல்கலாம் குறித்த சொற்பொழிவு, கவிதை, பாடல் உள்ளிட்டவற்றை மாணவர்கள் படைத்தனர். முடிவில் அதில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    திருப்பத்தூர் நேஷனல் கேட்டரிங் சமுதாயக்கல்லூரியில் அப்துல்கலாம் உருவப்படத்திற்கு முதல்வர் சுரேஷ்பிரபாகர் தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் மரம் நடுவதின் அவசியத்தை வலியுறுத்தி நினைவு அஞ்சலி செலுத்த வந்த அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    இதேபோல் கீழச்சிவல்பட்டி ஆர்.எம்.மெய்யப்பச் செட்டியார் பள்ளியில் தாளாளர் எஸ்.எம்.பழனியப்பன் தலைமையில் மாணவர்கள், ஆசிரிய-ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் எஸ்.பழனியப்பன் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜோதிராஜா வரவேற்றார். பின்னர் ‘கலாம் இறக்கவில்லை, சற்று இளைப்பாறுகிறார்’ என்ற தலைப்பில் மாணவ-மாணவிகள் கலாமின் சாதனைகளை விளக்கினர். மேலும் இந்நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மலேசியவாழ் தமிழர்கள் காயத்ரி, மணிகண்டன், சஞ்சய்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளிச் செயலாளர் குணாளன் நன்றி கூறினார்.

    தேவகோட்டை அருகே புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பஞ்சு தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்தினர். பின்னர் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ‘மாமனிதர் அப்துல்கலாம்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    காரைக்குடி ராகவேந்திரா பள்ளியில் அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி செயலாளர் கார்த்திக், முதன்மை முதல்வர் நாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் மாணவர்கள் அப்துல்கலாம் வேடமணிந்தும், அவரது முகமூடி அணிந்தும் வந்தனர். 
    Next Story
    ×