search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்
    X

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம்

    புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் புதிதாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். #FoodOfficers

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கணேஷ் வெளியிட்டு உள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் உணவு தொழில் புரிவோர்கள் தங்களின் உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ்களை பெற மற்றும் பொது மக்கள் உணவு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் பொருட்டு புதுக்கோட்டை உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறையில் புதிதாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    இதில் குருசாமி புதுக்கோட்டை நகராட்சி மற்றும் புதுக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலராகவும், தியாகராஜன் அன்னவாசல் மற்றும் பொன்னமராவதி வட்டாரத்திற்கும், வேலுவாசகம் அறந்தாங்கி நகராட்சி மற்றும் அறந்தாங்கி வட்டாரத்திற்கும், அருண்பிரகாஷ் அரிமளம் மற்றும் திருமயம் வட்டாரத்திற்கும், சிவக்குமார் ஆவுடையார்க்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டாரத்திற்கும், கார்த்திக் குன்றாண்டார்கோவில் மற்றும் விராலிமலை வட்டாரத்திற்கும், ராமநாதன் திருவரங்குளம் வட்டாரத்திற்கும், விஜயகுமார் கந்தர்வக்கோட்டை மற்றும் கறம்பக்குடி வட்டாரத்திற்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் உணவு கலப்படம் மற்றும் தரங்கள் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். #FoodOfficers

    Next Story
    ×