search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து கீரனூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
    X

    சொத்துவரி உயர்த்தப்பட்டதை கண்டித்து கீரனூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    தமிழக அரசின் சொத்து வரி உயர்வைக் கண்டித்து கீரனூரில் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கீரனூர்:

    தமிழக அரசுசொத்து வரி, வீட்டு வரிகுடிநீர்வரி ஆகியவற்றை உயர்த்தியுள்ளதை கண்டித்து குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கீரனூர் நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கீரனூர் கடைவீதியில் உள்ள காந்தி சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஏழுமலை தலைமை தாங்கினார், டேவிட் முன்னிலை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தை சிதம்பரம் தொடங்கிவைத்து பேசினார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராசன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை பற்றி விளக்கி பேசினார்.உடனடியாக தமிழக அரசு உயர்த்தப்பட்டுள்ள வரிகளை நீக்க வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படுவது குறித்து ஆலோசிக்கப்படும் எனகூறினார். #tamilnews
    Next Story
    ×