search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருப்பூர்-மேட்டுப்பட்டிபகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்
    X

    கருப்பூர்-மேட்டுப்பட்டிபகுதிகளில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

    கருப்பூர் மற்றும் மேட்டுப்பட்டி நாளை மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. #Powercut

    சேலம்:

    சேலம், கருப்பூர் துணை மின் நிலையத்தில் பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருப்பூர், தேக்கம்பட்டி, செங்கரடு, வெள்ளாளப்பட்டி, காமலாபுரம், எட்டி குட்டப்பட்டி, கருத்தானூர், சக்கரசெட்டிப்பட்டி, புளியம் பட்டி, நாரணம்பாளையம், ஆணைகவுண்டம்பட்டி, மாமாங்கம், சூரமங்களம், ஜங்சன், புதிய பஸ் நிலையம், ஐந்துரோடு, குரங்குசாவடி, நரசோதிப்பட்டி, ரெட்டியூர் மற்றும் நரகமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை செயற்பொறியாளர் மவுலீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    மேட்டுப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை மறு நாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மேட்டுப்பட்டி, காரிப்பட்டி, சேசன் சாவடி, முத்தம்பட்டி, வெள்ளாள குண்டம், கூட்டாத்துப்பட்டி, சின்னகவுண்டாபுரம், எஸ்.என்.மங்கலம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை செயற் பொறியாளர் சுந்தரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×