என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சொத்துவரி உயர்வை கண்டித்து கரூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
கரூர், ஜூலை.28-
தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பபெற வலியுறுத்தி தி.மு.க. சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் தலைமைதபால் அலுவலகம் அருகே ஆர்ப் பாட்டம் நடந்தது. ஆர்ப் பாட்டத்துக்கு மாவட்ட செய லாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசும்போது, சொத்து வரியை 100 சதவிதம் உயர்த்தி இருப்பது மக்களுக்கு பேரிடியாக இருக்கிறது. இது அவர்களது வாழ்வாதாரத்தை சுரண்டும் வகையில் உள்ளது.
எனவே சொத்துவரிஉயர்வு அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். கரூரில் ஒருங் கிணைந்த பஸ் நிலையத்தை அமைப்பதில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பது பயணி களிடத்தே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சொத்துவரி உயர்வை கண்டித்து தி.மு.க. வினர் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங் கணைஎழுப் பினர். மாவட்ட துணை செயலாளர் எம்.எஸ்.கருணாநிதி, தாந்தோன்றி ஒன்றிய செயலாளர்எம்.ரகுநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப் பாட்டத்தில், தி.மு.க. மாநில சட்ட பிரிவு இணை செயலாளர் வக்கீல் மணிராஜ், நகர செயலாளர்கள் எஸ்.வி. கனகராஜ், கரூர் கணேசன், வக்கீல் சுப்பிரமணியன், துணை செயலாளர் ரமேஷ்பாபு, பொதுக்குழு உறுப்பினர் வி.கே.டி.ராஜ்கண்ணு உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்