search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கண்டன சுவரொட்டி- மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது வழக்கு
    X

    8 வழிச்சாலை திட்டத்துக்கு எதிராக கண்டன சுவரொட்டி- மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது வழக்கு

    திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #GreenwayRoad
    திருச்சி:

    திருச்சி மாநகரின் பல்வேறு இடங்களில் திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் அமைப்பு, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில், சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

    இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், திருச்சி கோட்ட இணை பொறுப்பாளருமான இல.கண்ணன் திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜை சந்தித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.

    அதன்பேரில் நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு கமி‌ஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகள் மீது திருச்சி கண்டோன்மென்ட், கோட்டை, உறையூர், தில்லைநகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GreenwayRoad
    Next Story
    ×