search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூரில் கார்கில் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை
    X

    அரியலூரில் கார்கில் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை

    அரியலூர் மாவட்டத்தில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பில் கார்கில் போரில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    கார்கில் போரில் தம் இன்னுயிர் நீத்து நம்மையும் நம் நாட்டையும் காப்பாற்ற போராடிய ராணுவ வீரர் களுக்கு, மரியாதை செலுத்தும் விதமாக டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சார்பாக கார்கில் விஜய் திவாஸ்- ஐ முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள டி.வி.எஸ். ஷோரூம்களில் கார்கில் காலிங் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதன்படி, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். சார்பில், நடைபெற்ற ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கே.கே.சி. கல்வி நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வான சின்னப்பன், போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன், உதவி ஆய்வாளர் ராமதாஸ், அரிமா சங்க தலைவர் லயன் சக்தி ரவிச்சந்திரன், செயலாளர் கண்ணையன், காவல் துறையினர், ஊர்க்காவல் படையினர், கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தங்களது டி.வி.எஸ். மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக வந்து ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், மரியாதை செலுத்தும் விதமாகவும் நாட்டுப்பற்றை தூண்டும் முழக்கங்களை முழங்கி கொண்டு வந்தனர்.

    இந்த ஊர்வலம் கே.ஆர்.டி., டி.வி.எஸ். ஷோரூமிலிருந்து பஸ் நிலையம், அண்ணாசிலை, கடைவீதி, டாக்டர் கருப்பையா நகர் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று முடிவடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பொது மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் சண்முகம் மற்றும் சர்வீஸ் மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் கே.ஆர்.டி., டி.வி.எஸ். நிறுவன உரிமையாளர் ராஜன் நன்றி கூறினார்.
    Next Story
    ×