search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் நாளை அதிமுக ஆலோசனை கூட்டம்- வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு
    X

    பெரம்பலூரில் நாளை அதிமுக ஆலோசனை கூட்டம்- வைத்திலிங்கம் எம்.பி. பங்கேற்பு

    பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்து பெரம்பலூரில் நாளை அதிமுக ஆலோசனை கூட்டம் நடக்கிறது. கட்சியினர் திரண்டு வர ஆர்.டி.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அழைப்பு விடுத்துள்ளார். #vaithilingammp
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நாளை (28-ந்தேதி) மாவட்ட அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் கலந்துகொண்டு பேசுகிறார்.
    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். டி.ராமச்சந்திரன்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வருகிற பாராளுமன்ற தேர்தல் பணி குறித்தும், பாராளுமன்ற தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், சிறப்பு ஆலோசனை கூட்டம்  பெரம்பலூர் துறைமங்கலம் ஜே.கே. மகாலில் நாளை (28-ந் தேதி, சனிக்கிழமை) காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. 

    இதில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான வைத்திலிங்கம் கலந்து கொண்டு பேசுகிறார். எனவே இக்கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், அனைத்து அணி நிர்வாகிகள், அனைத்து நிலை பொறுப்பாளர்கள், கழக தொண்டர்கள் பெருந்திரளாக  கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். 

    இவ்வாறு ஆர்.டி.ராமச்சந் திரன் எம்.எல்.ஏ. அந்த அறிக்கையில் கூறியுள்ளார். #vaithilingammp
    Next Story
    ×