என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சத்தியமங்கலத்தில் கல்லூரிக்கு பஸ் விட கோரி மாணவர்கள் சாலை மறியல்
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலத்தில்அரசு கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 950 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கல்லூரிக்கு செல்ல சரியாக பஸ் வசதி இல்லை என்று மாணவர்கள் கூறி வந்தனர். ஒரேயொரு பஸ் மட்டும் செல்கிறது.
அந்த பஸ்சும் அத்தாணி ரோட்டில் இறக்கிவிட்டு சென்று விடுகிறதாம். மேலும் அங்கிருந்து கல்லூரிக்கு 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டுமாம்.
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து அரசு கலை கல்லூரிக்கு 4 கி.மீ. தூரம் உள்ளது.
ஆகவே பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரிக்கு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி இன்று காலை கல்லூரி மாணவ- மாணவிகள் அத்தாணி ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு சத்தியமங்கலம் போலீசார் விரைந்தனர். மாணவ-மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மாணவ-மாணவிகள் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுத்தனர்.
மனுவை போலீசார் பெற்றுக் கொண்டு அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #studentstruggle
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்