என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீர்காழியில் ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்
Byமாலை மலர்27 July 2018 10:13 AM GMT (Updated: 27 July 2018 10:13 AM GMT)
சீர்காழியில் ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டதையடுத்துயடுத்து தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழியில் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் ரெயில் நிலையம் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக செல்லும் ரெயில்கள் உள்பட பல்வேறு ரெயில்கள் தினமும் இந்த வழியாக செல்லும்.
இந்த நிலையில் இன்று காலை திருப்பதி எக்ஸ்பிரஸ், விழுப்புரம் பயணிகள் ரெயில் சென்ற பின்னர் சீர்காழி ரெயில் நிலையம் அருகே சில அடி தூரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை ரெயில் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தண்டவாளத்தை சீரமைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அடுத்து திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழிக்கு 11.30 மணிக்கு வரும் என்பதால் அதற்கு முன்பே சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழியில் பனங்காட்டாங்குடி என்ற இடத்தில் ரெயில் நிலையம் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக செல்லும் ரெயில்கள் உள்பட பல்வேறு ரெயில்கள் தினமும் இந்த வழியாக செல்லும்.
இந்த நிலையில் இன்று காலை திருப்பதி எக்ஸ்பிரஸ், விழுப்புரம் பயணிகள் ரெயில் சென்ற பின்னர் சீர்காழி ரெயில் நிலையம் அருகே சில அடி தூரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை ரெயில் ஊழியர்கள் கண்டுபிடித்தனர். உடனே அவர்கள் இதுபற்றி மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் தண்டவாளத்தை சீரமைக்கும் கருவிகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். அடுத்து திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழிக்கு 11.30 மணிக்கு வரும் என்பதால் அதற்கு முன்பே சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதற்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X