search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள்- கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள்- கலெக்டர் நேரில் ஆய்வு

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொட்டபெட்டா ஊராட்சிக்குட்பட்ட சின்கோனா பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 400 மீட்டர் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டார்.

    தும்மனட்டி ஊராட்சி முனியாபுரம், எப்பநாடு ஊராட்சி கோயில்மேடு, கங்கா நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் பழங்குடியினர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, போக்குவரத்து வசதி போன்றவை உள்ளனவா? என்றும் சுகாதாரம் குறித்தும் ஆய்வு செய்து அப்பகுதி பொதுமக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் 1500 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் தூனேரி ஊராட்சி அலுவலக கட்டிட பணியினையும் அவர் பார்வையிட்டார்.

    மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் கடநாடு ஊராட்சிக்குட்பட்ட பெந்தட்டி பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 2010 மீட்டர் வெள்ள தடுப்பு மேம்படுத்துதல் பணிகளையும்,

    ஆக மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைவில் முடிக்குமாறு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொறுப்பு) சுமதி, செயற்பொறியாளர் பசுபதி, வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமன், நாகராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×