search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை
    X

    10 நாட்களுக்குப் பிறகு ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக மழை பெய்வதுபோல் மேகக்கூட்டங்கள் சூழ்ந்தாலும் மழை பெய்யவில்லை.

    நேற்று பகலில் வழக்கம் போல் வெயில் அடித்தது. மாலையில் மேகக்கூட்டங்கள் சூழ்ந்து வந்தாலும் மழை பெய்யாமல் ஏமாற்றியது.

    அதே சமயம் இரவில் பொதுமக்கள் யாரும் எதிர்பாராத வகையில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

    கன கனமழையாக பெய்யா விட்டாலும் மாவட்டம் முழுவதும் பரவலாகமழை பெய்துள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதேபோல கோபி, கவுந்தப்பாடி, ஈரோடு, கொடிவேரி அணை பகுதியிலும் இரவில் இடி மின்னலுடன் மழை பெய்தது. வனப்பகுதியான பவானிசாகர், தாளவாடி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வனப்பகுதி ரம்மியமாக காட்சி அளித்தது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

    கொடிவேரி அணை-8.2

    பெரும்பள்ளம் அணை -6

    ஈரோடு -5

    மொடக்குறிச்சி -1

    Next Story
    ×