search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.கே.ஜி. சீட் வாங்கி தருவதாக மோசடி - பணத்தை கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்
    X

    எல்.கே.ஜி. சீட் வாங்கி தருவதாக மோசடி - பணத்தை கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்

    கேந்திர வித்யாலயா பள்ளியில் எல்.கே.ஜி. சீட் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டவரிடம் பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    சென்னை:

    அடையாறு இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சண்முக வடிவு. இவரிடம் துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் எல்.கே.ஜி. சீட் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.

    கிண்டி ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் தனது மகளை சேர்ப்பதற்காக சண்முக வடிவு மணிகண்டனிடம் பணம் கொடுத்து ஏமாந்துள்ளார். இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த நிலையில் கோட்டூர்புரம் சர்தார்பட்டேல் சாலையில் உள்ள ஆஸ்பத்திரி அருகில் வைத்து சண்முக வடிவுக்கு மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பணத்தை திருப்பி கேட்டால் குடும்பத்தோடு கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார்.

    இதுபற்றி கோட்டூர்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×