search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை - விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய சுகாதார துறை அமைச்சர்
    X

    புதுக்கோட்டை - விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவிய சுகாதார துறை அமைச்சர்

    தமிழக சுகாதார துறை அமைச்சர் கீரனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். #VijayaBaskar
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு காரும்  மினி வேனும் மோதி விபத்து ஏற்பட்டது.
    இந்த விபத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
     
    அந்த சமயத்தில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புதுக்கோட்டைக்கு காரில் சென்றார். அவர் கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்தை கடந்து செல்ல முற்பட்டார்.

    விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 108 ஆம்புலன்சை வரவழைத்து தேவையான முதலுதவி சிகிச்சை அளித்தார். அத்துடன், அவர்களை ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பின்னர் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.
    Next Story
    ×