search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்
    X

    தஞ்சையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் உண்ணாவிரதம்

    பி.எஸ்.என்.எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சார்பாக தஞ்சை தொலைபேசி நிலைய அலுவலகத்தில் இன்று 2-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
    தஞ்சாவூர்:

    பி.எஸ்.என்.எல் அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தஞ்சை மேரீஸ் கார்னர் தொலைபேசி நிலைய அலுவலகத்தில் நேற்று தொடங்கி இன்று 2-வது நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    ஒருங்கிணைப்பாளர் உதையன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கிள்ளி வளயன், ராஜா பெரோஸ் முஹமத், பிரபாகரன், சேகர், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வூதியர் சங்கங்களின் பொறுப்பாளர்கள் 25-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை உடனே வழங்க வேண்டும். 3-வது சம்பள மாற்றத்தை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு பென்சன் மாற்றத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×