search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயங்கொண்டத்தில் பா.ஜனதா கட்சியின் ஆய்வுக் கூட்டம்
    X

    ஜெயங்கொண்டத்தில் பா.ஜனதா கட்சியின் ஆய்வுக் கூட்டம்

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.
    ஜெயங்கொண்டம்:

    சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அமைப்பாளர் சரவணன், பொருப்பாளர் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது,

    வரும் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் மிகப் பெரிய சக்தியாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நிர்வாகிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. பாஜக கட்சி மாபெரும் சக்தியைப் பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சேலம் எட்டு வழி சாலை பற்றி கேட்டபோது பாரதிய ஜனதா கட்சியில் வாஜ்பாய் நான்கு வழிச்சாலையை கொண்டு வந்தார். தற்போது தொடர்ந்து எட்டு வழிச்சாலை நாடு முழுவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு பல தடைகள் வருகின்றது. இதற்கு அரசியல் காரணமே.

    அரியலூர் மாவட்டத்தில் மத்திய அரசு மூலம் வளர்ச்சித் திட்டப் பணிகள் இது வரை எந்தவித திட்டமும் செயல்படுத்தப்படவில்லை எனக் கேட்ட போது ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்து வருகிறோம். அரியலூர் மாவட்டத்தில் என்ன தேவையோ அவைகளை விரைவில் செயல்படுத்துவோம் எனக் கூறினர்.

    பாஜக வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் இணைந்து போட்டியிடுமா? என கேட்டபோது அகில இந்திய தலைவர் கூறியது போல கூட்டணிக்கு நாங்கள் தயார் கூட்டணிக்கு யார் வருகிறார்களோ அவர்களுடன் வலுவான உறுதியான கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

    தற்போது ஒரு பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றியுள்ளோம். வரும் காலகட்டத்தில் கணிசமான தொகுதிகளை கணிசமான எண்ணிக்கையில் பல தொகுதிகளை கைப்பற்றுவோம் என கூறினார்.

    கூட்டத்தில் பா.ஜ.க. நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×