search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இடிகரை அருகே மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு - பெண்கள் போராட்டம்
    X

    இடிகரை அருகே மீண்டும் டாஸ்மாக் கடை திறப்பு - பெண்கள் போராட்டம்

    இடிகரை அருகே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போராடி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை அறிந்த பெண்கள் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை இடிகரை பேரூராட்சிக்கு உட்பட்டது மணியக்காரம்பாளையம். இங்குள்ள சங்கர் நகர் 7-வது வார்டில் நேற்று டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இது அந்த பகுதி பெண்களுக்கு நேற்று தெரியவில்லை.

    கூட்டம் அதிகமாக இருப்பதை அறிந்தபின்னரே அவர்களுக்கு தெரியவந்தது.

    கடந்த 6 மாதங்களுக்கு முன்பு போராடி தடுத்து நிறுத்தப்பட்ட இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டதை அறிந்த பெண்கள் இன்று காலை டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து பெண்கள் கூறும்போது, மேட்டுப்பாளையம்- அன்னூரை இணைக்கும் முக்கிய சாலையில் உள்ள இந்த டாஸ்மாக் கடையால் ஏற்கனவே நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டோம். பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் இந்த வழியாகத்தான் செல்லவேண்டும். எனவே உடனே டாஸ்மாக் மதுக்கடையை மூடவேண்டும் என்று கூறினர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×