search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை பள்ளியக்ரகாரம் பகுதியில் லாரிகளில் இருந்து பேட்டரி திருட்டு
    X

    தஞ்சை பள்ளியக்ரகாரம் பகுதியில் லாரிகளில் இருந்து பேட்டரி திருட்டு

    தஞ்சை பள்ளியக்ரகாரம் பகுதியில் லாரிகளில் இருந்து பேட்டரி திருடிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #robberycase

    தஞ்சாவூர்:

    தஞ்சை பள்ளியக் ரகாரம் பகுதியில் இன்று காலை சில லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் டிரைவர்கள் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது சந்தேகம்படும்படி 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை லாரி டிரைவர்கள் நீங்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.

    பின்னர் அவர்கள் 3 பேரும் அவர்கள் வந்த லோடு ஆட்டோவில் ஏறி அங்கிருந்து சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த லாரி ஓட்டுனர்கள் அவர்களை பின்தொடர்ந்து சென்று பிடித்தனர்.

    அப்போது அவர்கள் ஓட்டி சென்ற லோடு ஆட்டோவில் லாரிகளின் பேட்டரிகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் 3 பேரையும் பிடித்து தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கரந்தை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 30), பழைய மீன்மார்க்கெட் பகுதியை சேர்ந்த மற்றொரு பிரகாஷ் (19), ஒத்தகார தெருபகுதியை சேர்ந்த செல்வா (31) என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #robberycase

    Next Story
    ×