search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விடுதலை சிறுத்தை பேனர் கிழிப்பு- கூவத்தூரில் மோதலை தடுக்க போலீசார் குவிப்பு
    X

    விடுதலை சிறுத்தை பேனர் கிழிப்பு- கூவத்தூரில் மோதலை தடுக்க போலீசார் குவிப்பு

    கூவத்தூரில் விடுதலை சிறுத்தைகள் பேனர்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதையடுத்து கலவரம் ஏதும் வந்து விடாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. #VKC
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் கடந்த 21-ந்தேதி நடைபெற்ற ரெட்டை மலை சீனிவாசனின் 159-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வந்தார். அவரை வரவேற்று அப்பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.

    இதில் கூவத்தூர் நாவக்கால் பகுதியில் பேனர்களை அதே பகுதியை சேர்ந்த சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியதில் சிலர் காயமடைந்தனர் இந்த நிலையில் இரு தரப்பினரும் மோதி கொள்ள அப்பகுதியில் சுற்றுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கலவரம் ஏதும் வந்து விடாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். #VCK
    Next Story
    ×