search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் ஏழேரியில் குடிநீர் வசதி: அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்
    X

    அரியலூர் ஏழேரியில் குடிநீர் வசதி: அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்

    அரியலூர் மாவட்டம் ஏழேரி கிராமத்தில் குடிநீர் குழாய்யை அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ, தொடங்கி வைத்தார்.

    அரியலூர்:

    அரியலூர் ஒன்றியம் கருப்பிலாக்கட்டளை ஊராட்சி, ஏழேரி கிராமத்தில் பொதுமக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர், அதன் அடிப்படையில் ரூ.25.40 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்குழாய் அமைத்து பைப் லைன் மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலையில், அரசு தலைமைக்கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் எம்.எல்.ஏ குடிநீர் குழாய்யை திறந்து வைத்து பேசியதாவது:

    அரியலூர்ஒன்றியத்திற்குட்பட்ட கருப்பிலாக்கட்டளை ஊராட்சியைச் சேர்ந்த ஏழேரி கிராம மக்கள் உப்புநீர் மட்டுமே குடிக்க பயன்படுத்தி வந்தனர். இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் என்னிடம் நல்ல குடி தண்ணீர் எங்களது கிராமத்திற்கு வழங்கிட கோரிக்கை வைத்திருந்தார்கள்.

    அதனடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் துரித நடவடிக்கையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து சுமார் ரூ.25.40 லட்சம் மதிப்பீட்டில் வைப்பம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் புதிய பைப் லைன் அமைத்திட ஆணைப்பிறப்பித்து, இப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இக்கிராமத்தில் உள்ள 115 குடும்பங்கள் பயன்பெறும் என தெரிவித்தார்.

    இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட தலைவர் கணேசன், மாவட்ட பொருளாளர் அன் பழகன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்ச முத்து, ஒன்றிய செயலாளர் செல்வராஜ், அரசுவக்கீல் சாந்தி, தாசில்தார் முத்து லெட்சுமி, யூனியன் கமிஷ்னர் ஜாகீர்உசேன், செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சரவணன், சிவக்குமார், மாநில ஒப்பந்தகாரர் பிரேம், முன்னாள் யூனியன் சேர்மன் சேப்பெருமாள், கல்லங்குறிச்சி பாஸ்கர், பொய்யூர் பாலு, சுண்டகுடி சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிச்சபிள்ளை, மேகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×