search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லாலாபேட்டையில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்
    X

    லாலாபேட்டையில் மதிமுக செயல் வீரர்கள் கூட்டம்

    லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அருகே பழைய ஜெயங்கொண்ட சோழபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ராமலிங்கம் கேசவன் தலைமை தாங்கினார். இதில் செப்டம்பர் மாதம் ஈரோட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்வது, உட் கட்சியை மேம்படுத்துதல் பொது செயலாளர் வழியில் நடப்பது என தீர்மானிக்கப்பட்டது. 

    கூட்டத்தில் கரூப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டி வைகோ நகரில் சிமெண்ட் சாலை அமைக்க வலியுறுத்தபட்டது, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றித்தில் மேட்டு திருக்காம் புலியூரில் விவசாயம் நிலங்களுக்கு செல்லும் பாலம் சேதமடைந்துள்ளது அதை புதுபித்து தர வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

    கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சங்கப் பிள்ளை, மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வன் மற்றும் பொன்னம்பலம், வெங்கடாசலம், ஆனந்த், சோமு ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நன்றி அன்பு கூறினர்.

    Next Story
    ×