search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
    X

    செந்துறை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    செந்துறை அருகே இன்று குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #Waterproblem

    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முதுகுளம் கிராமத்தில் கடந்த 6 மாதமாக சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 3மாதத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து ஆழ்குழாய் கிணறு அமைத்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்படி அப்பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் குறைந்த அடியில் அமைக்கப்பட்டதால் அதில் இருந்து சரியாக தண்ணீர் வரவில்லை.

    இதனால் முதுகுளம் பகுதிக்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யப்பட வில்லை.

    இந்தநிலையில் இன்று காலை அப்பகுதி பொது மக்கள் முதுகுளத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    உடனே சம்பவ இடத்திற்கு தளவாய் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். #Waterproblem

    Next Story
    ×