search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது
    X

    வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேர் கைது

    வேலாயுதம்பாளையம் அருகே அனுமதியின்றி மது விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #arrestcase

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ரங்கசாமி (55) இவர் மரவாபாளையம் பஸ் நிலையம் அருகே அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்துவருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல்வந்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ரங்கசாமி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனே போலீசார் ரங்கசாமியை கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் சிவகங்கை மாவட்டம் திருவேக்கம்பட்டி, சீவகசிந்தாமணி தெருவைச் சேர்ந்தவர் செல்வபாண்டி (21) என்பவர் புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாகவேலாயுதம் பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு அனுதியின்றி மது விற்ற செல்வபாண்டியை கைது செய்தனர். அவரிடமிருந்து 6 மது பாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த 2 பேரிடமும் வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். #arrestcase

    Next Story
    ×