search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திய 110 லிட்டர் சாராயம் பறிமுதல் - வாலிபர் கைது
    X

    நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்திய 110 லிட்டர் சாராயம் பறிமுதல் - வாலிபர் கைது

    நாகூர் அருகே மோட்டார் சைக்கிளில் கடத்தி வரப்பட்ட 110 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபரை கைது செய்தனர்.
    நாகூர்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேகர் தேஷ்முக் உத்தரவின்பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுரையின்படியும், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாஞ்சூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். அதில் 110 லிட்டர் சாராயம் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் அருண்குமார் (வயது22) என்பதும், காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

    பின்னர் போலீசார் அருண்குமாரை கைது செய்து, அவர் கடத்தி வந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×