என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி தே.மு.தி.க.வினர் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
Byமாலை மலர்22 July 2018 1:06 PM GMT (Updated: 22 July 2018 1:06 PM GMT)
விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் பூரண நலத்துடன் தமிழகம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கரூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது கட்சியினர் மற்றும் தொண்டர்கள் விஜயகாந்த் பூரண நலத்துடன் தமிழகம் திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
கரூர் திருக்காம்புலியூர் மாரியம்மன் கோவிலில் விஜயகாந்த் நலம்பெற வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அவை தலைவர் அரவை முத்து, பொருளாளர் கே.எஸ். அரிவின்ஸ் தலைமை தாங்கினர். மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் மாநில மாற்றுத் திறனாளிகள் அணி செயலாளர் பவர் டெக்ஸ் செல்வராஜ், பேரவை துணை தலைவர் பொன். இளங்கோவன், சோமூர் ரவி, துணை செயலாளர் விஸ்வ நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் சுப்பையா, தொழிற்சங்கம் இளங்கோவன், ஆனந்த், கேப்டன் மன்றம் பெரியண்ணன், முன்னாள் துணை செயலாளர் குமார், யசோதா, சாந்தி, சுப்பிரமணியன், கோபி, தொண்டரணி பழனிச்சாமி மற்றும் தே.மு.தி.க. வினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X