search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாடானை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது
    X

    திருவாடானை அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய 2 பேர் கைது

    திருவாடானை அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய இருவர் கைது செய்யப்பட்டனர். 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை அடுத்த பாசனி கிராமத்தின் அருகே ஆற்றுப்பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதனைத் தொடர்ந்து திருவாடானை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் அந்தப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அனுமதியில்லாமல் பாசானி கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (42) என்பவர் மணல் அள்ளியிருந்தார். அவரை கைது செய்ததோடு டிராக்டரையும் பறிமுதல் செய்தார்.

    அதே போல் சப்- இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் மற்றும் தனிபிரிவு போலீஸ் சதீஷ் இருவரும் ரோந்து சென்ற போது பனிக்கோட்டை பகுதியில் அனுமதியில்லாமல் மணல் அள்ளிய அதே கிராமத்தைச் சேர்ந்த ரக்சின் (43) என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்து ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×