search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரைக்குடி அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது
    X

    காரைக்குடி அருகே 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்- போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவர் கைது

    காரைக்குடி அருகே 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை மேல மணக்குடியை சேர்ந்த 7 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

    நேற்று மாலை பள்ளி முடிந்ததும் மாணவியை அவரது தாயார் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு நடந்து வந்தார். அப்போது எதிரே மணிகண்டன் (17) என்ற வாலிபர் வந்தார்.

    அவரை கண்டதும் அந்த சிறுமி தாயாரின் பின்னே சென்று ஒளிந்தாள். ஏன் அவரை பார்த்ததும் இப்படிச் செய்கிறாய்? என்று தாயார் கேட்டதும் அந்த சிறுமி தேம்பி தேம்பி அழுதாள்.

    வீட்டுக்கு சென்றதும் சிறுமியிடம் தாயார் விசாரித்தார். அப்போது அந்த வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமியை தனியே அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் களஞ்சியம் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை போக்சோ சட்டத்தில் கைது செய்தார். விசாரணையில் அவர் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருவது தெரிய வந்தது. தொடர்ந்து மணிகண்டனிடம் விசாரணை நடைபெறுகிறது.
    Next Story
    ×