search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓமலூர் போலீஸ் நிலையம் அருகே பத்திர எழுத்தர் கடையில் பணம் கொள்ளை
    X

    ஓமலூர் போலீஸ் நிலையம் அருகே பத்திர எழுத்தர் கடையில் பணம் கொள்ளை

    சேலம் மாவட்டம் ஓமலூர் காவல் நிலையம் அருகே உள்ள பத்திர எழுத்தர் கடையில் பட்ட பகலில் உள்ளே புகுந்து மேஜையில் இருந்த 1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். #Robberycase

    ஓமலூர்:

    ஓமலூர் பேரூராட்சி கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் இவர் ஓமலூர் காவல் நிலையம் அருகே உள்ள சார்பதிவாளர் அலுவலக பகுதியில் பத்திர எழுத்தர் அலுவலகம் வைத்து செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், அரசு மருத்தவமனை என அனைத்தும் ஒரே இடத்தில் இருப்பதால் எப்போதும் கூட்டமாக காணப்படும்.

    இந்த நிலையில் நேற்று பத்திரம் எழுதும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பத்திரம் வாங்குவதற்காக தனது மேஜை டிராயரில் 1 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை வைத்து பூட்டிவிட்டு சார்பதிவாளர் அலுவலகத்திற்கு உள்ளே சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வந்த டிராயரை திறந்து பார்த்த போது மேஜை டிராயரில் இருந்த பணத்தை காணவில்லை. மேலும் வேறு சாவி கொண்டு பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது.

    இது குறித்து அன்பழகன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பட்டபகலில் கொள்ளையடித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும் கொள்ளை போன இடத்திற்கு எதிரே உள்ள ஓமலூர்அரசு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். #Robberycase

    Next Story
    ×