என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை அருகே வியாபாரியிடம் பணம்- செல்போன் வழிப்பறி
பேரையூர்:
மதுரை திருநகர் பாலாஜி நகரைச்சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் நாகராஜ் (வயது 30). திருமங்கலம் அருகே உள்ள கருவேலம்பட்டியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை அடைத்து விட்டு, நாகராஜ் வீட்டிற்கு புறப்பட்டார். கருவேலம்பட்டியை ரெயில்வே கேட் அருகே மொபட்டில் அவர் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சுமார் 30 வயது மதிக்கத்தக்க 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் நாகராஜை வழி மறித்து அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து ஆஸ்டின் பட்டி போலீசில் நாகராஜ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள மம்சாபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (58). இவர், ஊராண்ட உரப்பனூர் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு, அந்த கடைக்குள் யாரோ புகுந்து ரூ.4,150 மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து திருமங்கலம் நகர் போலீசில் முருகேசன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Robberycase
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்