search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மானாமதுரை ரெயில்வே மேம்பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி
    X

    மானாமதுரை ரெயில்வே மேம்பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி

    மானாமதுரை ரெயில்வே மேம்பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. #Railwaybridge

    மானாமதுரை:

    மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலை பணிகளுக்கு விரகனூர், சிலைமான், திருப்புவனம், லாடனேந்தல், மானாமதுரை நகர் பகுதி, மேலபசலை, கமுதகுடி, தெளிச்சாத்தநல்லூர், பரமக்குடி ஆகிய பகுதிகளில் மதுரை-ராமேசுவரம் ரெயில் பாதையில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் மேலப் பசலை ரெயில்வே மேம்பாலம் முழுமையாக முடிக்கப்பட்டு போக்கு வரத்து நடந்து வருகிறது.

    மீதமுள்ள பகுதியில் பாலங்கள் இடையே உள்ள தண்டவாளத்தின் மீது ராட்சத இரும்பு கருடர்கள் அதிக எடை தாங்கும் 5 கிரேன்கள் உதவியுடன் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

    கர்டர்கள் இணைக்கப்பட்டு பாலப்பணிகள் முழுவதும் முடிந்து விட்டால் மதுரை-ராமேசுவரம் தங்க நாற்கர சாலையில் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.#Railwaybridge

    Next Story
    ×