என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சரத்பவார், யஷ்வந்த் சின்காவுடன் வைகோ சந்திப்பு
Byமாலை மலர்19 July 2018 10:48 PM GMT (Updated: 19 July 2018 10:48 PM GMT)
ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு வருமாறு முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி யஷ்வந்த் சின்காவை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து அழைப்பு விடுத்தார்
சென்னை:
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாரை நேற்று காலை அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சரத்பவார் வருவதாகக் கூறி வைகோவிடம் ஒப்புதல் தந்தார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, முன்னாள் மத்திய நிதி மந்திரியும், வெளியுறவுத் துறை மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் வருவதாக ஒப்புதல் தந்தார்.
மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாரை நேற்று காலை அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சரத்பவார் வருவதாகக் கூறி வைகோவிடம் ஒப்புதல் தந்தார்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, முன்னாள் மத்திய நிதி மந்திரியும், வெளியுறவுத் துறை மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் வருவதாக ஒப்புதல் தந்தார்.
மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X