search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரத்பவார், யஷ்வந்த் சின்காவுடன் வைகோ சந்திப்பு
    X

    சரத்பவார், யஷ்வந்த் சின்காவுடன் வைகோ சந்திப்பு

    ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு வருமாறு முன்னாள் மத்திய மந்திரி சரத்பவார் மற்றும் வெளியுறவுத் துறை மந்திரி யஷ்வந்த் சின்காவை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து அழைப்பு விடுத்தார்
    சென்னை:

    தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், மராட்டிய மாநில முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரியுமான சரத்பவாரை நேற்று காலை அவரது இல்லத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து, செப்டம்பர் 15-ந் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கும் ம.தி.மு.க. முப்பெரும் விழா மாநில மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். சரத்பவார் வருவதாகக் கூறி வைகோவிடம் ஒப்புதல் தந்தார்.

    முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, முன்னாள் மத்திய நிதி மந்திரியும், வெளியுறவுத் துறை மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை அவரது இல்லத்தில் வைகோ சந்தித்து, ம.தி.மு.க. முப்பெரும் விழாவுக்கு அழைப்பு விடுத்தார். அவரும் வருவதாக ஒப்புதல் தந்தார்.

    மேற்கண்ட தகவல் ம.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×