என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நவீன தொழில்நுட்பத்தின் மூலம் தொலைபேசி சேவையை அறிமுகம் செய்த பி.எஸ்.என்.எல்
Byமாலை மலர்19 July 2018 10:41 PM GMT (Updated: 19 July 2018 10:41 PM GMT)
இந்தியாவில் முதல்முறையாக அப்ளிகேசன் மூலம் இயங்கும் தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.
சென்னை :
பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனத்தின் (தமிழ்நாடு) தலைமை பொதுமேலாளர் ஆர்.மார்ஷல் அந்தோனி லியோ சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
இந்தியாவில் முதல்முறையாக அதிநவீன என்.ஜி.என் எனப்படும் அடுத்த தலைமுறை நெட்வொர்க் மூலம் இயங்கும் இணையதள தொலைபேசி சேவையை பி.எஸ்.என்.எல் அறிமுகம் செய்துள்ளது.
இதற்காக ‘விங்ஸ்’ என்ற பெயரில் அப்ளிகேசன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேசனை செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றில் பதிவிறக்கம் செய்து, இந்தியாவில் உள்ள அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனத்தின் செல்போன் மற்றும் தொலைபேசி எண்களில் இருந்து அழைப்புகளை இலவசமாக ஏற்கவும், பேசவும் முடிவும்.
இந்திய புதிய சேவை வருகிற 25-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இந்த புதிய சேவையை பெறுவதற்கு ஓராண்டு கட்டணமாக ரூ.1,099 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விங்ஸ் ஆப் மூலம் குறுந்தகவல், படங்கள், வீடியோ போன்றவற்றை அனுப்பவும், பகிரவும் முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X