search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் - லாரி மோதி விபத்து: வாலிபர் பலி
    X

    நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் - லாரி மோதி விபத்து: வாலிபர் பலி

    நாமகிரிப்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிளும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் பலியானார். போட்டோகிராபர் படுகாயம் அடைந்தார்.
    நாமகிரிப்பேட்டை:

    நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பச்சுடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மகன் சரவணன் (வயது 21). டிப்ளமோ படித்துள்ள இவர் வேலை இல்லாமல் இருந்தார். இதனால் தனது நண்பர் போட்டோகிராபரான அருள் (27) என்பவருடன், அவர் திருமணம் போன்ற விழாக்களுக்கு புகைப்படம் எடுக்க செல்லும்போது இவரும் உடன் சென்று வந்தார்.

    இதேபோல நேற்று முன்தினம் இருவரும் மோட்டார் சைக்கிளில் ராசிபுரத்துக்கு ஒரு நிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க சென்றனர். பின்னர் ஊருக்கு திரும்பினர். மோட்டார் சைக்கிளை சரவணன் ஓட்ட, அருள் பின்னால் உட்கார்ந்து இருந்தார். இவர்களது மோட்டார் சைக்கிள் காக்காவேரி பகுதியில் வந்தபோது அந்த வழியாக ஆத்தூரில் இருந்து கேரளா நோக்கி சென்ற லாரியும், இவர்களது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

    இந்த விபத்தில் இருவரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து இருவரையும் அக்கம், பக்கத்தினர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சரவணன் பரிதாபமாக இறந்தார்.

    அருள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் ஆத்தூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். 
    Next Story
    ×