search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை காரணமாக ஊட்டியில் காய்கறி விலை ‘கிடுகிடு’ உயர்வு
    X

    மழை காரணமாக ஊட்டியில் காய்கறி விலை ‘கிடுகிடு’ உயர்வு

    தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு மலைக்காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிப்பிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. குளிர் பிரதேசத்தில் இந்த மலைக்காய்கறிகள் அதிக விளைச்சலை தருவதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலைக்காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள்.

    அறுவடை செய்யப்படும் மலைக்காய்கறிகள் மேட்டுப்பாளையம், கோவை, அவினாசி, திருச்சி, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    நீலகிரியில் தற்போது தென்மேற்கு பருவமைழ தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி சேறாக உள்ளது. அதன் காரணமாக காய்கறிகளை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு மலைக்காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது. இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது.

    ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பீட்ரூட் கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரையும், உருளைக்கிழங்கு ரூ.55 முதல் ரூ.70 வரையும், கேரட் ரூ.30 முதல் ரூ.40 வரையும், முட்டைக்கோஸ்-ரூ.12, பீன்ஸ்-ரூ.65, முள்ளங்கி-ரூ.20, டர்னீப்- ரூ.30, நூல்கோல்-ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் வரத்து குறைவால் ரூ.65 ஆக விலை அதிகரித்து உள்ளது. காய்கறிகள் வரத்து குறைவால் வெளியிடங்களுக்கு அனுப்புவதும் குறைந்து உள்ளது.

    Next Story
    ×