search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பூர் ஒன்றியத்தில் பா.ம.க. பொதுகூட்டம்
    X

    வேப்பூர் ஒன்றியத்தில் பா.ம.க. பொதுகூட்டம்

    வேப்பூர் ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது துவக்க விழா மற்றும் சாதனை விளக்கம் பொதுகூட்டம் நடைபெற்றது.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-வது துவக்க விழா மற்றும் சாதனை விளக்கம் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30 ஆண்டு சாதனைகளை பற்றி விளக்கி உறையாற்றினர். மேலும் பாட்டாளி  மக்கள் கட்சியின் போராட்டங்கள் இட ஒதுக்கீடு மற்றும் சுதாகதரதுறையில் அன்புமணியின் சாதனைகள் பற்றி விளக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணை  தலைவர் தங்கதுரை முன்னிலை  வகித்தார்.சிறப்பு விருந்தினராக  மாநில துணை தலைவர்  பொங்கலூர் மணி கண்டன் , மாநில துணை பொது செயலாளர் வைத்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

    மேலும் மாவட்ட தலைவர் மருதவேல்,  வன்னியர்சங்க மாவட்ட தலைவர் தர்மராஜ், பெரம்பலூர் நகர செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செய லாளர் ராஜேந்திரன்,மாவட்ட துணை  தலைவர் கிருஷ்ண மூர்த்தி, அரியலூர் ஒன்றிய செயலாளர்  கருணாநிதி, மாநில மாணவர் அணி துணை தலைவர் பிரபு,கழக பேச்சாளர் தமிழ் இனியன், மாவட்ட  துணை செயலாளர் தேவேந்திரன், மாவட்ட துணை செயலாளர், சுப்ர மணியன் மாநில துணை பொறுப்பாளர்கள்கண்ணன், சுப்ரமணியன், சிவசூரியன், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தர்மராஜ், மாவட்ட  வன்னியர் சங்க செயலாளர் செல்ல ரவி மற்றும் குன்னம் தொகுதி செயலாளர் மொழியரசு, மாநில துணை தலைவர்கள் அனுக்கூர் ராஜேந்திரன், மதுரா  செல்வராஜ் மாநில நிர்வாகிகள் செல்வகுமார், ஒன்றிய  செயலாளர்கள் பார்த்திபன்,  ஞானஜோதி, செல்வக் குமார், தனவேல், கோபி, திருமுருகன், அருள், சிவசங்கர் , ரமேஷ், முத்துசாமி ராஜ்குமார் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் வடமலை மற்றும் மாநில மாவட்ட கிளை  பொறுப்பாளர் உட்பட சுமார் 1000 க்கும்  மேற் பட்டோர் கலந்து கொண்டனர். 

    முடிவில்  நன்றியுரை நகர பொறுப்பாளர் கனல்குமார் கூறினார்.
    Next Story
    ×