search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாராபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
    X

    தாராபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி

    தாராபுரம் அலங்கியம் சாலையில் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    தாராபுரம்:

    தாராபுரம் அலங்கியம் சாலை பூங்காவீதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தாராபுரம் அலங்கியம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இவர், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் துரைசாமி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

    ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியான காளிமுத்து(22) என்பவரும் காயம் அடைந்தார். அவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×