என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்19 July 2018 3:49 PM GMT (Updated: 19 July 2018 3:49 PM GMT)
தாராபுரம் அலங்கியம் சாலையில் நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
தாராபுரம்:
தாராபுரம் அலங்கியம் சாலை பூங்காவீதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தாராபுரம் அலங்கியம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இவர், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் துரைசாமி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியான காளிமுத்து(22) என்பவரும் காயம் அடைந்தார். அவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாராபுரம் அலங்கியம் சாலை பூங்காவீதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு தாராபுரம் அலங்கியம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த இவர், நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் துரைசாமி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்த, மின்வாரிய ஒப்பந்த தொழிலாளியான காளிமுத்து(22) என்பவரும் காயம் அடைந்தார். அவர் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X