என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதுகுளத்தூரில் மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்19 July 2018 12:24 PM GMT (Updated: 19 July 2018 12:24 PM GMT)
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதுகுளத்தூர்:
முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் பால்சாமி. இவரது மகன் நாகராஜ் (வயது37). இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் முதுகுளத்தூருக்கு புறப்பட்டார்.
முதுகுளத்தூர் மின் வாரிய அலுவலக ரோட்டின் வளைவில் திரும்பியபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மின்கம்பத்தில் பயங்கரமாக மோதியது. இதில் நாகராஜ் படுகாயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முதுகுளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X