search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடை வரி பல மடங்கு உயர்வு - தாம்பரம் நகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை
    X

    கடை வரி பல மடங்கு உயர்வு - தாம்பரம் நகராட்சியில் வியாபாரிகள் முற்றுகை

    கடை வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தில் உள்ள துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு கடைக்கும் ஆண்டுக்கு ரூ.3500 வரியாக நகராட்சி வசூலித்து வந்தது. இந்த நிலையில் வரி கட்டணத்தை ரூ.46.300 ஆக நகராட்சி உயர்த்தியது. இதை கட்டாவிட்டால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கடை வரி பல மடங்கு உயத்தப்பட்டதால் வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தார்.

    வரியை குறைக்கக்கோரி இன்று வியாபாரிகள் தாம்பரம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    அப்போது விக்கிரமராஜா கூறியதாவது, தாம்பரம் துரைசாமி ரெட்டியார் மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு வரியை 110 சதவீதம் உயர்த்தி உள்ளனர். இந்த வரி உயர்வை குறைக்க வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாடு முழுவதும் வியாபாரிகளை திரட்டி போராட்டம் நடத்துவோம், முதல்வரை சந்தித்தும் முறையிடுவோம் என்றார்.

    வரி உயர்வை குறைக்க கோரி கோ‌ஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்திய வியாபாரிகள் பின்னர் கலைந்து சென்றனர்.
    Next Story
    ×