search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குரூப்-1 தேர்வு எழுதும் பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு
    X

    குரூப்-1 தேர்வு எழுதும் பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்வு - அரசாணை வெளியீடு

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #TNPSC #Group1
    சென்னை:

    தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப்-1 தேர்வு எழுதுவோருக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை  சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் வெளியிட்டார். எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான வயது வரம்பு 35-ல் இருந்து 37 ஆகவும், பொதுப் பிரிவினருக்கு 30-ல் இருந்து 32 ஆகவும் உயர்த்தப்படும் என அறிவித்தார்.



    இந்நிலையில், குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பு உயர்வு தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டிஎஸ்பி, துணை ஆட்சியர் உள்ளிட்ட உயர் பதவிகள் குரூப்-1 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. #TNPSC #Group1
    Next Story
    ×