என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3-வது முறையாக சிக்கிய போலி டாக்டர்- கால்நடைக்கு பயன்படுத்திய மருந்துகள் கண்டுபிடிப்பு
Byமாலை மலர்18 July 2018 2:18 PM GMT (Updated: 18 July 2018 2:18 PM GMT)
ஓமலூர் அருகே ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டரை கைது செய்த போலீசார் கிளீனிக்கில் பயன்படுத்திய மருந்துகளை பறிமுதல் செய்தனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியில் போலி டாக்டர்கள் கிளீனிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதார துணை இயக்குநர் (பொறுப்பு) சத்யாவுக்கு புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து இன்று மருத்துவக்குழுவினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள், போலீசார் செம்மாண்டப்பட்டிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கு மேச்சேரி பகுதியை சேர்ந்த பாலு (வயது 48) என்பவர் பி.ஏ. படித்து விட்டு, ஆங்கிலம் மருத்துவம் நோயாளிகளுக்கு பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலி டாக்டர் பாலுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கிளீனிக்கில் சோதனை போட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆங்கில மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இருந்தது. மேலும் அங்கு கால்நடைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கிளீனிக்கை சீல் வைத்தனர். இவர் ஆங்கில மருத்துவம் பார்த்து தொடர்ந்து 3-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செம்மாண்டப்பட்டியில் போலி டாக்டர்கள் கிளீனிக் வைத்து நடத்தி வருவதாக சுகாதார துணை இயக்குநர் (பொறுப்பு) சத்யாவுக்கு புகார்கள் வந்தது.
இதனை தொடர்ந்து இன்று மருத்துவக்குழுவினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள், போலீசார் செம்மாண்டப்பட்டிக்கு சென்று ஆய்வு நடத்தினார்கள். அப்போது அங்கு மேச்சேரி பகுதியை சேர்ந்த பாலு (வயது 48) என்பவர் பி.ஏ. படித்து விட்டு, ஆங்கிலம் மருத்துவம் நோயாளிகளுக்கு பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலி டாக்டர் பாலுவை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கிளீனிக்கில் சோதனை போட்டத்தில் தடை செய்யப்பட்ட ஆங்கில மருந்துகள் மற்றும் மாத்திரைகள் இருந்தது. மேலும் அங்கு கால்நடைகளுக்கு பயன்படுத்தக்கூடிய மருந்து, மாத்திரைகள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. இதை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கிளீனிக்கை சீல் வைத்தனர். இவர் ஆங்கில மருத்துவம் பார்த்து தொடர்ந்து 3-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X