search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தா.பேட்டையில் குடிநீர் வழங்ககோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    தா.பேட்டையில் குடிநீர் வழங்ககோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

    குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    தா.பேட்டை:

    தா.பேட்டை ஒன்றியம் எம்.புதுப்பட்டி ஊராட்சியை சேர்ந்த அழகாப்பட்டிதெற்கு புரம் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடுஏற்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிகிறது.

    இதையடுத்து அழகாப்பட்டி தெற்குபுரம் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய தலைவர் ராஜா தலைமை தாங்கினார். ஒன்றிய துணைத் தலைவர் சரவணன், ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் மனோகரராஜன், துணைத் தலைவர் முத்துசாமி, உள்ளிட்ட பலர் சிறப்புரை ஆற்றினர்.

    அப்போது அழகாப்பட்டி தெற்குபுரம் கிராமத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும், அங்குள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

    இதில் பொதுமக்கள், மகளிர் குழுவினர்கள், கட்சி நிர்வாகிகள் ரமேஷ், மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×