search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவதா? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கேள்வி
    X

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவதா? தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் கேள்வி

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. #ThoothukudiIncident #HighCourt
    மதுரை:

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள்.

    இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், மத்திய பாகம், சிப்காட், முத்தையாபுரம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த கலவரம் தொடர்பாக 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட துப்பாக்கிச்சூடு தொடர்பாக 15 வழக்குளை ஒன்றாக சேர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகபதிவு செய்யப்பட்டுள்ள 243 வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்ற கோரி இன்று மனுதாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா? என இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் சரமாரி கேள்விகளை கேட்டனர்.

    மேலும், தூத்துக்குடி போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வீடியோ மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்யலாம் எனவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. #Thoothukudi #ThoothukudiIncident #HighCourt
    Next Story
    ×