search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாற்றப்பட்ட ஆசிரியருக்கு பதில் புதிய ஆசிரியர் வேண்டி கலெக்டரிடம் மனு
    X

    மாற்றப்பட்ட ஆசிரியருக்கு பதில் புதிய ஆசிரியர் வேண்டி கலெக்டரிடம் மனு

    லாலாபேட்டை அரசு பள்ளி மாணவர்கள் மாற்றப்பட்ட ஆசிரியருக்கு பதில் புதிய ஆசிரியர் வேண்டி கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி வேளாண் பாட பிரிவு மாணவ-மாணவிகள் நேற்று முன்தினம் கரூர் கலெக் டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருந்ததாவது:

    லாலாபேட்டை அரசு மேல் நிலைப்பள்ளி வேளாண் பாடப்பிரிவில் பணியாற்றிய ஆசிரியர் மாறுதல்ஆகி நீண்ட நாட்கள் ஆகியும் மாற்று ஆசிரியர் நியமிக்கபடவில்லை மேலும் தேர்வு நெருங்கி வருவதால் அந்தபாடம் மட்டும் நடத்தபடாமல் இருக்கிறது என்று மனுவில் கூறியிருந்தனர்.

    அந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

    இதனை தொடர்ந்து அன்று மாலை கரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனந்தநாராயணன், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி கபீர் ஆகியோர் பள்ளிக்கு சென்று மாணவ மாணவிகளிடம்பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கூறியதாவது, மாற்று பணியில் இருந்து இரண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்து, இரண்டு நாட்களில் பணியாற்ற ஏற்பாடு செய்யப்படும். இனி தொடர்ந்து வேளாண் பாட பிரிவு செயல்படும் என்று உறுதி அளித்தார். பேச்சுவார்த்தையின் போது தலைமை ஆசிரியர் மாலா, உதவி தலைமை ஆசிரியர் மார்ட்டின் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். #tamilnews
    Next Story
    ×