search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி
    X

    காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை முடிந்து வீடு திரும்பினார் கருணாநிதி

    காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். #karunanidhi #DMK
    சென்னை:

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சுவாசிக்க மிகவும் சிரமப்பட்டதால் மூச்சுவிடுவதை எளிதாக்கும் வகையில், அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

    தொடர் சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கருணாநிதி, கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனைக்கு சென்று வருகிறார். 

    இந்நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கருணாநிதி இன்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிரக்யாஸ்டமி கருவில் உள்ள பழைய குழாய் அகற்றப்பட்டு புதிய குழாய் மாற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததை அடுத்து, அவர் கோபாலபுரம் வீட்டுக்கு திரும்பினார். 
    Next Story
    ×