என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொட்டாம்பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் கொலை- வாலிபர் கைது
Byமாலை மலர்18 July 2018 10:24 AM GMT (Updated: 18 July 2018 10:24 AM GMT)
கொட்டாம்பட்டி அருகே பிணமாக கிடந்த பெண் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மேலூர்:
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள உதினிபட்டியில் கடந்த 10-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் அங்குள்ள தென்னந்தோப்பில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. நகைகளும் மாயமாகி இருந்தன. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீசார் அப்துல் ரகிம், திருஞானம், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள பாண்டான்குடியைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் கோகுல் (வயது 25) என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, தீவிர விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொன்றது அவர்தான் என்பது தெரிந்தது.
போலீஸ் விசாரணையில் கீழ்க்கண்ட விவரங்கள் தெரியவந்தன.
கொலையுண்ட பெண்ணின் பெயர் பொன்மணி (30). இவர் நெல்லை மாவட்டம், ஆவுடையாள்புரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரது மனைவி ஆவார். இருவருக்கும் திருமணமாகி 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணமாகாத வாலிபர் கோகுல், கூடங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அந்த நிறுவனத்திற்கு எதிரே உள்ள செல்போன் ரீசார்ஜ் கடையில் பொன்மணி பணி புரிந்தார்.
இந்த கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்த கோகுலுக்கும், பொன்மணிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கோகுல் சொந்த ஊரான பாண்டான்குடிக்கு வந்து விட்டார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாக தெரிகிறது.
இதையறிந்த பொன்மணி, கடந்த 9-ந் தேதி பாண்டான்குடிக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், இல்லையென்றால் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே கூறி அசிங்கப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பொன்மணியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கொட்டாம்பட்டி அருகே உள்ள உதினிப்பட்டி தென்னந்தோப்புக்கு கோகுல் அழைத்து வந்துள்ளார்.
அங்கு இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல் இரும்புக்கம்பியால் பொன்மணியை தாக்கினார்.
தலையில் காயம் அடைந்த அவர் மயங்கி விழவே, சேலை முந்தானையால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் வாலிபர் கோகுலை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 5 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவரை போலீசார் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். #tamilnews
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள உதினிபட்டியில் கடந்த 10-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க பெண் அங்குள்ள தென்னந்தோப்பில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டு இருந்தது. நகைகளும் மாயமாகி இருந்தன. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியாமல் இருந்தது.
இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவின் பேரில் கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், போலீசார் அப்துல் ரகிம், திருஞானம், ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொட்டாம்பட்டி அருகே உள்ள பாண்டான்குடியைச் சேர்ந்த பழனிக்குமார் என்பவரது மகன் கோகுல் (வயது 25) என்பவரை தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே, தீவிர விசாரணையில் கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கொன்றது அவர்தான் என்பது தெரிந்தது.
போலீஸ் விசாரணையில் கீழ்க்கண்ட விவரங்கள் தெரியவந்தன.
கொலையுண்ட பெண்ணின் பெயர் பொன்மணி (30). இவர் நெல்லை மாவட்டம், ஆவுடையாள்புரம் மேற்குத் தெருவைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவரது மனைவி ஆவார். இருவருக்கும் திருமணமாகி 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
திருமணமாகாத வாலிபர் கோகுல், கூடங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார். அந்த நிறுவனத்திற்கு எதிரே உள்ள செல்போன் ரீசார்ஜ் கடையில் பொன்மணி பணி புரிந்தார்.
இந்த கடைக்கு ரீசார்ஜ் செய்ய வந்த கோகுலுக்கும், பொன்மணிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கோகுல் சொந்த ஊரான பாண்டான்குடிக்கு வந்து விட்டார். அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாக தெரிகிறது.
இதையறிந்த பொன்மணி, கடந்த 9-ந் தேதி பாண்டான்குடிக்கு வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறும், இல்லையென்றால் கள்ளக்காதல் விவகாரத்தை வெளியே கூறி அசிங்கப்படுத்துவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதைத்தொடர்ந்து பொன்மணியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு கொட்டாம்பட்டி அருகே உள்ள உதினிப்பட்டி தென்னந்தோப்புக்கு கோகுல் அழைத்து வந்துள்ளார்.
அங்கு இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோகுல் இரும்புக்கம்பியால் பொன்மணியை தாக்கினார்.
தலையில் காயம் அடைந்த அவர் மயங்கி விழவே, சேலை முந்தானையால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் வாலிபர் கோகுலை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், 5 பவுன் நகைகள், செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
பின்னர் அவரை போலீசார் மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X