search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் ரெயிலில் அடிபட்டு பீகார் தொழிலாளி பலி
    X

    கோவையில் ரெயிலில் அடிபட்டு பீகார் தொழிலாளி பலி

    கோவையில் ரெயிலில் அடிபட்டு பீகார் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ராஜ்கிஷோர் மகதோ (52). இவர் பல வருடங்களாக கோவை போத்தனூர் அருகே உள்ள கணேசபுரத்தில் குடும்பத்துடன் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு ராஜ்கிஷோர் மகதோ வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இரவு 10 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் ராஜ்கிஷோர் மகதோ பிணமாக கிடந்தார். அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் ராஜ் கிஷோர் மகதோ குடும்பத்தினர் அங்கு விரைந்து சென்றனர். அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போத்தனூர் ரெயில்வே போலீசார், ராஜ் கிஷோர் மகதோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×